என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நூற்றாண்டு விழா விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்
    X

    கருணாநிதி நூற்றாண்டு விழா விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்

    • வரும் 16-ந்தேதி நடக்க உள்ளதாக கலெக்டர் அறிவிப்பு
    • 361 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது;- விழுப்புரம் மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருகின்ற 16-ந்தேதி 50 அரசு, தனியார் பள்ளி மையங்களில் கட்டுரைப்போட்டி, பேச்சு போட்டி, ஒவிய போட்டி, கவிதைப் போட்டி போன்ற போட்டிகளும், 10 கல்லூரி மையங்களில் கட்டுரை ப்போட்டி, பேச்சு போட்டி, ஒவிய போட்டி போன்ற போட்டிளும் நடைபெற உள்ளது. அரசு, தனியார் பள்ளி என 50 பள்ளி மையங்களில் அதனை சுற்றியுள்ள 361 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் 10 கல்லூரி மையங்களில் 50-க்கும் மேற்ப்பட்ட அரசு, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர். இப்போட்டிகளின் இறுதியில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

    மேலும், இப்போட்டி களில் வெற்றிபெரும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடை பெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இப்போ ட்டிகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளார்கள். பள்ளி மாணவ மாண விகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பயன்பெறு மாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×