search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருகம்பாக்கத்தில் இன்று மாலை கலைஞர் நூற்றாண்டு விழா- குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பங்கேற்பு
    X

    விருகம்பாக்கத்தில் இன்று மாலை கலைஞர் நூற்றாண்டு விழா- குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பங்கேற்பு

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.
    • ஆன்மீகவாதிகள் கலைஞரின் புகழ் குறித்து வாழ்த்தி பேசுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதி கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பொன்னழகு திருமண மண்டபத்தில் நடக்கிறது. பகுதி செயலாளர் கே.கண்ணன் தலைமை தாங்குகிறார். பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., மாநகராட்சி கணக்கு குழு தலைவர் க.தனசேகரன், ராசா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிவஞான பாலய சுவாமிகள், கோவை சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமானந்த குமரகுருபர அடிகளார், கவிஞர் இளைய கம்பன் ஆகிய ஆன்மீகவாதிகள் கலைஞரின் புகழ் குறித்து வாழ்த்தி பேசுகிறார்கள்.

    நிகழ்ச்சியில் தமிழச்சி தங்க பாண்டியன், துணைமேயர் மகேஷ்குமார், காசி முத்துமாணிக்கம், அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., துரைராஜ், முருகேசன், தங்கராஜ் வாசுகி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×