search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    30-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடக்கம் பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா
    X

    கோப்பு படம்

    30-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடக்கம் பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா

    • பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காப்பு கட்டு தலுடன் தொடங்குகிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவி லில் கார்த்திகை தீபத்திரு விழா இன்று காப்பு கட்டு தலுடன் தொடங்குகிறது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் சரவண ப்பொய்கையில் ஆறு செந்தாமரை மலர்களில் 6 குழந்தையாய் தவழ்ந்த போது கார்த்திகை பெண்க ளால் சீராட்டி வளர்க்கப்ப ட்டார். அதனால் முருக ப்பெருமானுக்கு கார்த்தி கேயன் என்ற பெயரும் உண்டு. முருக ப்பெருமானின் அவதார சிறப்பை விளக்கும் வகையில் கார்த்திகை தீபத்திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வரு கிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படு கிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 30-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கு கிறது.

    இந்த திருவிழா 7 நாட்கள் நடக்கிறது. விழாவின் 6 நாட்களும் சாயரட்சை பூஜைக்கு பின்பு சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.

    மேலும் இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பின் தங்கரத புறப்பாடு நடை பெறும். 6-ம் திருநாளான 5 ம் தேதி யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு வரப்பட்டு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    7-ம் திருநாளான 6- ம் தேதி திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படும். உடன் விஸ்வரூபதரிசனம் சிறப்பு பூஜை நடைபெறும். மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 4 மணிக்கு சாய ரட்சை பூஜையும் நடை பெறும். அதன் பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனையை தொட ர்ந்து 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையடுத்து மலை க்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்ற ப்படும். மாலை 6 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டு, சொக்க ப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதன் பின் உபகோவி ல்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், லட்சுமி நாராயண ப்பெரு மாள், பாலசமுத்திரம் அகோ பிலவரத ராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×