search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் மீட்கப்பட்ட கர்நாடக பெண் இன்ஸ்பெக்டர் முயற்சியால் உறவினர்களிடம் ஒப்படைப்பு
    X

    சென்னையில் மீட்கப்பட்ட கர்நாடக பெண் இன்ஸ்பெக்டர் முயற்சியால் உறவினர்களிடம் ஒப்படைப்பு

    • மகையா பானு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தார்.
    • சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த மகையா பானுவை மீட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காப்பகம் ஒன்றில் தங்க வைத்திருந்தனர்.

    சென்னை:

    கர்நாடக மாநிலம் தேவங்கரே பகுதியைச் சேர்ந்தவர் மகையா பானு. 35 வயதான இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவரை மீட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காப்பகம் ஒன்றில் தங்க வைத்திருந்தனர். இவரை குடும்பத்தினருடன் சேர்ப்பதற்கு எஸ்.சி.ஆர்.பி. பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாகிரா முயற்சி மேற்கொண்டார்.

    தெளிவான மனநிலைக்கு வந்திருந்த மகையா பானுவிடம் பேசி அவர்களது குடும்பத்தினர் பற்றி தெரிய வந்ததும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

    சென்னை காப்பகத்தில் இருந்து பெங்களூரு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மகையா பானு இன்ஸ்பெக்டரின் முயற்சியால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×