search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் செருப்பாலூரில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி விளையாட்டு அரங்கம்
    X

    குலசேகரம் செருப்பாலூரில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி விளையாட்டு அரங்கம்

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணெலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
    • கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றியதுடன் அந்த இடத்தில் அடிக்கல் நாட்டி முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

    திருவட்டார்:

    பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவட்டார் வட்டம், குல சேகரம் பேரூராட்சி செருப்பாலூர் கல்லடிமா மூடு பகுதியில் பொதுப்ப ணித்துறைக்கு சொந்தமான 4.83 ஏக்கர் நிலத்தினை தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ஒப்படைக்கப் பட்டதைத் தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணியை முதல்-அமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதையடுத்து செருப்பாலூர் கல்லடிமா மூட்டில் மினி விளையாட்டரங்கம் அமையவுள்ள இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றியதுடன் அந்த இடத்தில் அடிக்கல் நாட்டி முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பத்மநாபபுரம் தொகு திக்குட்பட்ட கல்லடி மாமூட்டில் மினி விளை யாட்டரங்கம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த தமிழக முதல்-அமைச்சருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் நன்றி தெரி வித்துக்கொள்கி றேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே நாகர்கோ வில் சட்டமன்ற தொகுதியில் அண்ணா விளை யாட்டரங்கம் உள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகளிலும் மினி விளையாட்டரங்கங் கள் அமைய உள்ளன.

    இதில் முதற்கட்டமாக பத்மநாபபுரம் தொகு திக்குட்பட்ட குல சேகரம் கல்லடிமாமூட்டில் அமைக் கப்படுகிறது. அடுத்த கட்டமாக குளச்சல் தொகுதியில் அமைக்கப்படும். அதனை தொடர்ந்து கிள்ளியூர், விளவங்கோடு, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்படும். குறிப் பிட்ட ஒரு இடத்தை மையமாக கொண்டு இந்த அந்த விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படாமல் அனைத்து பகுதி மக்க ளுக்கும் பயன் கிடைக்க வேண்டுமென்பதற்காக இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செய்தித்தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட் வரவேற்றார். குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸ் நன்றி கூறினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், திருவட்டார் தாசில்தார் முருகன், மாவட்ட அரசு வக்கீல் ஜான்சன், குலசேரம் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ், குலசேகரம் பேரூராட்சி துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் ஜே.எம்.ஆர். ராஜா, கலை இலக்கிய பகுத்தறிவு அணி தலைவர் ஜெஸ்டின் பால்ராஜ், குலசேகரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜெபித் ஜாஸ், வட்டார காங்கிரஸ் பொருளாளர் ஜேம்ஸ் ராஜ் மற்றும் குலசேகரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×