என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்
    X

    முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

    • குழித்துறையில் வக்கீலாக உள்ளார்.
    • சொத்து சம்மந்தமாக ஏற்கனவே முன்விரோதம் உள்ளது

    நாகர்கோவில் : புதுக்கடை அருகே கழுநெட்டான் விளை பகுதியை சேர்ந்தவர் பாக்ய டென்னிஸ். இவரது மகன் பக்தசிங் (வயது 34). இவர் குழித்துறையில் வக்கீலாக உள்ளார். இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த குபிபாலன் (47). இவர்களுக்குள் சொத்து சம்மந்தமாக ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மீதும் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பக்தசிங் தனது வீட்டருகில் நிற்கும் போது குபிபாலன் மற்றும் அவரது மனைவி சந்திரிகா ஆகியோர் சேர்ந்து ஆயுதங்களால் பக்த சிங்கை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பக்தசிங் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×