search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளிச்சந்தையில் மதுபாட்டில்கள் திருடிய வாலிபர் கைது
    X

    வெள்ளிச்சந்தையில் மதுபாட்டில்கள் திருடிய வாலிபர் கைது

    • வாலிபர் துளை வழியாக 25 முழு மது பாட்டில்களை எடுத்துக்கொண்டிருந்தார்.
    • போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார்.

    கன்னியாகுமரி :

    வெள்ளிச்சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நேற்றிரவு வெள்ளிச்சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெள்ளிச்சந்தை சந்திப்பு அருகே டாஸ்மாக் கடையின் பின் பக்கம் சுவரில் துளை போடும் சப்தம் கேட்டது. உடனே அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது ஒரு வாலிபர் துளை வழியாக 25 முழு மது பாட்டில்களை எடுத்துக்கொண்டிருந்தார்.

    போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார். உடனே போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து, மது பாட்டில்களையும் மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திங்கள்நகரை அடுத்த ஆரோக்கியபுரம் குழியூரை சேர்ந்த வில்சன் (வயது 35) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வில்சனை கைது செய்தனர்.

    Next Story
    ×