என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளிச்சந்தையில் மதுபாட்டில்கள் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்4 Jun 2023 7:01 AM GMT
- வாலிபர் துளை வழியாக 25 முழு மது பாட்டில்களை எடுத்துக்கொண்டிருந்தார்.
- போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார்.
கன்னியாகுமரி :
வெள்ளிச்சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நேற்றிரவு வெள்ளிச்சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெள்ளிச்சந்தை சந்திப்பு அருகே டாஸ்மாக் கடையின் பின் பக்கம் சுவரில் துளை போடும் சப்தம் கேட்டது. உடனே அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது ஒரு வாலிபர் துளை வழியாக 25 முழு மது பாட்டில்களை எடுத்துக்கொண்டிருந்தார்.
போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார். உடனே போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து, மது பாட்டில்களையும் மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திங்கள்நகரை அடுத்த ஆரோக்கியபுரம் குழியூரை சேர்ந்த வில்சன் (வயது 35) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வில்சனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X