search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு 25 பூத்களிலும் பணிக்குழு
    X

    நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு 25 பூத்களிலும் பணிக்குழு

    • குளச்சல் நகர அ.தி.மு.க. முடிவு
    • மகளிர் அணி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது எனவும் வலியுறுத்தப்பட்டது

    குளச்சல் :

    குளச்சல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நகர அலுவலகத்தில் நட ந்தது. கவுன்சிலர் ஆறுமு கராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செய லாளர் ரவீந்திரவர்ஷன், ஆனக்குழி சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் சிட்டி சாகுல்அமீது வரவேற்று பேசினார். துணை செய லாளர் செர்பா தீர்மான ங்கள் வாசித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை, நகர முன்னாள் செயலாளர்கள் பஷீர்கோயா, கில்லேரியன் மற்றும் தர்மராஜ், ஜெகன், வினோத், அன்பில் அகமது, பூக்கடை றாபின், ஜில்லட், முகம்மது, சாகுல் அமீது, ஜோக்கின், லூயிஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் குளச்சல் நகரில் மாசுப்பட்டு கிடக்கும் ஏ.வி.எம். சானல், வெள்ளி யாகுளம் ஆகிய 2 நீர்நிலை களையும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு கொண்டு வர வலியுறுத்துவது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டும் வேட்பாளரின் வெற்றிக்கு தீவிர தேர்தல் பணி செய்வது, குளச்சல் நகராட்சியில் உள்ள 25 பூத்களிலும் மகளிர், இளை ஞர்கள் உள்ளிட்டோர்களை இணைத்து தேர்தல் பணிக்குழு அமைப்பது, கடந்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடந்த மாநாட்டில் குளச்சலில் இருந்து கலந்துகொண்ட தொண்டர்கள், மகளிர் அணி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது எனவும் வலியுறுத்தப்பட்டது. முடிவில் முன்னாள் துணை செயலாளர் தேவி சக்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×