search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே வாகன விபத்தில் தொழிலாளி பலி
    X

    இரணியல் அருகே வாகன விபத்தில் தொழிலாளி பலி

    • ரோட்டோரம் ஒதுக்கி நிறுத்தப்பட்டிருந்த டெம்போ மீது மோதி விபத்தில் சிக்கினார்.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள பன்னிக்கோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் தற்போது ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் கார்த்திக் திங்கள்சந்தை சென்று விட்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். காஞ்சிரவிளை அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக ரோட்டோரம் ஒதுக்கி நிறுத்தப்பட்டிருந்த டெம்போ மீது மோதி விபத்தில் சிக்கினார்.

    இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி வனிதா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×