search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணின் 5½ பவுன் தங்க நகை திருட்டு
    X

    இரணியல் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணின் 5½ பவுன் தங்க நகை திருட்டு

    • காலையில் எல்சிபாய் தனது மகனை கல்லூரியில் விட சென்றார்
    • புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குமாரபுரம் அருகே உள்ள கொற்றியோடு கன்றுபிலாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜோசப்ராஜ் (வயது 46). இவரது மனைவி எல்சிபாய் (42).

    இவர்களது மகன் லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முதல் நாள் என்பதால் காலையில் எல்சிபாய் தனது மகனை கல்லூரியில் விட சென்றார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக மண்டைக்காட்டில் இருந்து திங்கள்நகர் வந்த பஸ்சில் சென்றார்.

    திங்கள்நகர் பஸ் நிலையம் வந்து இறங்கியபோது அவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலி செயினை காணவில்லை. இதுகுறித்து எல்சிபாய் இரணியல் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×