search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்.ஜி.ஓ.காலனி அருகே வலை கம்பெனி அதிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
    X

    என்.ஜி.ஓ.காலனி அருகே வலை கம்பெனி அதிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

    • மறைத்து வைத்திருந்த அரிவாளால் சங்கர்கணேசின் பின்பக்க தலையில் வெட்டினார்.
    • கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    என்.ஜி. ஓ.காலனி அருகே உள்ள ஆத்திக் காட்டுவிளையை சேர்ந்தவர் சங்கர்கணேஷ் (வயது 29).

    இவர் அப்பகுதியில் வலை கம்பெனி நடத்தி வருகிறார். 6 மாதத்திற்கு முன்பு ஆத்திக்காட்டு விளையை சேர்ந்த பாஸ்கர் (39) என்பவரிடம் ரூ.50 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கி மாதம், மாதம் 10ஆம் தேதி வட்டி கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் இந்த மாதம் வட்டி கொடுக்காததை முன் விரோதமாக கொண்டு நேற்று சங்கர்கணேஷ் ஆத்திக்காட்டுவிளை வெள்ளைச்சாமியார் கோயில் பக்கம் நின்று கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த பாஸ்கர் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

    மேலும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சங்கர்கணேசின் பின்பக்க தலையில் வெட்டினார். அப்போது அக்கம் பக்கத்தினர் வந்ததால் பாஸ்கர் தப்பி ஓடி விட்டார்.

    அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த சங்கர் கணேசை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சங்கர் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் பாஸ்கர் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×