search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாவுபலி பொருட்காட்சி நிறைவு
    X

    வாவுபலி பொருட்காட்சி நிறைவு

    • விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
    • நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைதம்பி வழங்கினார்

    மார்த்தாண்டம் :

    குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வி.எல்.சி. திருமண மண்ட பத்தில் 98-வது வாவுபலி பொருட்காட்சி கடந்த 2 ந்தேதி தொடங்கி யது. 20 நாட்கள் நடைபெற்ற பொருட்காட்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆணையாளர் ராம திலகம் முன்னிலை வகித்தார்.

    விழாவில் பொருட்காட்சியில் நடைபெற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி அளவிலான கபடி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கள் வழங்கப்பட்டது.

    மேலும் பொருட்கா ட்சியில் வைக்கப்பட்டிருந்த விவசா யிகளின் விளை பொருட்கள், கைவினைப் பொருட்கள், கண்காட்சி பொருட்கள், ஓவியங்கள் போன்ற வற்றில் சிறந்த பொருட்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் பொன்.ஆசை தம்பி பேசும்போது, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை பணிக்கு மட்டும், 2 வருடங்களில் சுமார் ரூ.5 கோடி ஒதுக்கப்ப ட்டுள்ளது. முதலில் ரூ.3 கோடியும், 2-வது முறையாக ரூ.2 கோடியும் ஒதுக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தின் பைப் பதிக்கும் பணியினால் பணிகள் சரியான முறையில் செய்ய முடியாமல் தாமதமாகிவிட்டது.

    இருந்தாலும் எங்களால் முடிந்த அளவுக்கு சாலை களை போட்டு உள்ளோம். அடுத்த வாவுபலி பொரு ட்காட்சி நடைபெறுவதற்கு முன்பு அனைத்து சாலை களையும் கண்டிப்பாக சரி செய்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

    நிறைவு விழா நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பிரபின் ராஜா, கவுன்சிலர்கள் மெர்லின் தீபா, லலிதா, லில்லி புஷ்பம், ஜெயின் சாந்தி, செல்வகுமாரி, வக்கீல் ஷாஜிகுமார், அரு ள்ராஜ், விஜு, ரெத்தினமணி, சர்தார் ஷா, ரீகன், விஜய லட்சுமி, ரோஸ்லெட், மினி குமாரி, ஆட்லின் கெனில் மற்றும் நகராட்சி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×