search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு கோவிலில் வலியபடுக்கை பூஜை - நாளை நள்ளிரவு நடக்கிறது
    X

    மண்டைக்காடு கோவிலில் வலியபடுக்கை பூஜை - நாளை நள்ளிரவு நடக்கிறது

    • இதையொட்டி காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை
    • நிகழ்ச்சியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி க்கொடை விழா மாசி மாதம் கடைசி செவ்வாய்கிழமை நிறைவுபெறும் விதத்தில் பத்து நாட்களுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை திருக்கொடியேறி பத்து நாட்கள் நடக்கிறது. விழாவின் 6-ம் நாள் வெள்ளிக்கிழமை, அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்த பங்குனி மாத பரணி நட்சத்திரம் மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் மூன்று வலியபடுக்கை பூஜை நடக்கிறது. நாளை கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் நள்ளிரவு வலியபடுக்கை பூஜை நடக்கிறது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, தொடர்ந்து அன்னதானம், மாலை 5 மணிக்கு பஜனை, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை,

    இரவு 7 மணிக்கு நாதஸ்வரம், 8.30 மணிக்கு அத்தாழபூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது. நிகழ்ச்சியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அன்றைய தினம் பக்தர்க ளின் வச திக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வரு கின்றனர்.

    Next Story
    ×