search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை - தோவாளை சந்தையில் மல்லிகை ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனை
    X

    நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை - தோவாளை சந்தையில் மல்லிகை ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனை

    • தோவாளையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரளி, சம்பங்கி, துளசி, கோழிபூ போன்ற பல பூக்கள் வந்து விற்பனையாகிறது.
    • சந்தையில் இருந்து தினமும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் கேரள வியாபாரிகள் இங்கு வந்து பூக்களை கொள்முதல் செய்கின்றனர்

    கன்னியாகுமரி :

    தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற மலர் சந்தைகளில் ஒன்று குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தை ஆகும்.

    இந்தச் சந்தைக்கு ஆரல்வாய்மொழி குமாரபுரம், புதியம்புத்தூர், ராதாபுரம், மாடநாடார் குடியிருப்பு ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப்பூவும், திண்டுக்கல், மதுரை, மானா மதுரை, கொடை ரோடு, வத்தலகுண்டு, ராஜபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும் வருகின்றன. பெங்களூருவில் இருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர்ரோஸ், தோவாளையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரளி, சம்பங்கி, துளசி, கோழிபூ போன்ற பல பூக்கள் வந்து விற்பனையாகிறது.

    இந்த சந்தையில் இருந்து தினமும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் கேரள வியாபாரிகள் இங்கு வந்து பூக்களை கொள்முதல் செய்கின்றனர்.

    தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தோவாளை சந்தையில் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்கள் விலையேற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3 ஆயிரத்துக்கும் பிச்சிப்பூ ரூ. 2 ஆயிரத்துக்கும் இன்று விற்பனையானது. மற்ற பூக்களும் விலை உயர்ந்தே காணப்பட்டது.

    Next Story
    ×