என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரியில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர்
- ஆரல்வாய்மொழியில் இருந்து வாகனங்கள் அணிவகுத்து சென்றது
- மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் கலந்துகொள்ள உற்சாக பயணம்
நாகர்கோவில் :
மதுரையில் இன்று அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது. மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண் டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதையடுத்து தொண் டர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். குமரி மாவட்டத்தில் இருந்தும் அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மதுரைக்கு சென்றனர். குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் ஏற்பாட்டில் நிர்வாகிகள் வாகனங்களில் இன்று காலை மதுரைக்கு புறப்பட்டனர்.
இதேபோல் கன்னியா குமரி கிழக்கு மாவட்டத் துக்குட்பட்ட அகஸ்தீஸ் வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் நிர்வாகிகள் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். நாகர்கோவில் பகுதியில் இருந்து முன்னாள் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் நாஞ்சில் முருகேசன், வடக்கு மாநகர செயலாளர் ஸ்ரீலிஜா ஏற்பாட் டில் ஏராளமான நிர்வாகிகள் வாகனங்களில் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.
குமரி மேற்கு மாவட்டம், கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியில் இருந்து புறப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் ஆரல்வாய்மொழி யில் இருந்து ஒன்று சேர இன்று காலை மதுரைக்கு சென்றனர்.
வாகனங்கள் அனைத் தும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றது. குமரி மாவட் டத்தில் இருந்து புறப்பட்டு சென்ற நிர்வாகிகள் பலரும் சீருடையுடன் கையில் கட்சி கொடியுடன் புறப்பட்டு சென்றனர். இன்று காலையில் மட்டுமே 500-க் கும் மேற்பட்ட வாக னங்களில் நிர்வாகிகள், பொதுமக்கள் சென்றனர்.
ஏற்கனவே நேற்று இரவும் 150-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிர்வாகிகள் சென்று இருந்தனர். குமரி மாவட் டத்தில் இருந்து மதுரைக்கு சென்ற நிர்வாகிகளுக்கு தேவையான உணவு உள்பட அனைத்து வசதி களையும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்