search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
    X

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

    • கலெக்டரிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மனு
    • கட்டமைப்பு சரியாக அமைக்கப்படாத காரணத்தால் ஏற்பட்ட விபத்துகளால் மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்

    நாகர்கோவில் :

    கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தலைமையில் தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின், முஞ்சிறை ஒன்றிய காங்கிரஸ் கவுன்சி லர் பேபி ஜான், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் செய லாளர் சூசைராஜ், தூத்தூர் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஜின் உள்ளிட்டோர் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம், மீன் பிடிதொழிலையே வாழ்வாதாரமாக கொண்ட மேற்கு கடற்கரை கிராமங்fளில் வாழும் மீனவ மக்களுக்காக அமைக்கப்பட் டது. இந்த துறைமுகத்தின் கட்டமைப்பு சரியாக அமைக்கப்படாத காரணத்தால் ஏற்பட்ட விபத்துகளால் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 3 கட்டங்களாக முறையே ரூ.60 கோடி, ரூ.77 கோடி, ரூ.116 கோடி என மொத்தம் ரூ.253 கோடிக்கான அர சாணை பிறப்பித்து ஒப்பந்தம் கோரப்பட்டு துறைமுகம் மறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. திடீரென இந்த பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் கற்கள் கொட்டப்பட்டு துறைமுக மறு சீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் தொடர்ந்து கடலில் போடப்பட்ட கற்கள் அனைத்தும் கடலுக்குள் அடித்து செல்லப்பட் டுள்ளது. இதனால் துறைமுக நுழைவாயில் வழியாக மீன் பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் மீன வர்கள் பாதுகாப்பாக தொழில் செய்வதற்கு துறை முக கட்டமைப்பு பணிகளை காலம் தாழ்த்தாமல் விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ கூறியதாவது:-

    தேங்காப்பட்டணம் துறைமுக மறுகட்டமைப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போது ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கடல்சீற்றம் அதிகமாக இருக் கும் என்று கூறி பணிசுள் நடக்காமல் உள்ளது. ஆனால் இந்த ஆண்டு கடல் சீற்றம் அதிகமாக இல்லை.

    எனவே துறைமுக கட்டு மானப் பணியை விரைவில் தொடங்க வேண்டும். மீண்டும் மீன வர்கள் உயிரி ழப்பு ஏற்படாத வகையில் கட்டமைப்புகளை மேற் கொள்ள வேண்டும். இந்த பணிகளை காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும். துறைமுக மறு சீரமைப்பு பணிக்காக கற்கள் பிரச்சினை ஏற்பட் டது. எனவே குமரி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் துறைமுக கட்டுமான பணிக்கு கற்கள் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×