கொட்டாரத்தில் ரூ.7 லட்சம் செலவில் அலங்கார தரை ஓடுகள் பதிக்கும் பணி

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமையில் நடந்ததுஅகஸ்தீஸ்வரம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் பரமராஜா உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கொட்டாரத்தில் ரூ.7 லட்சம் செலவில் அலங்கார தரை ஓடுகள் பதிக்கும் பணி
Published on

கன்னியாகுமரி :

கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு பகுதியான கிட்டங்கி தெருவில் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக அலங்கார தரை ஓடுகள் பதிக்கப்பட உள்ளது. பணியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமை தாங்கினார். கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி அலங்கார தரை ஓடுகள் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

துணை தலைவி விமலாமதி, மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் வினோத், தமிழ்மாறன், தி.மு.க. கிளை செயலாளர் மதி, மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன்ஜானி, மாவட்ட தி.மு.க.இளைஞர்அணி துணைஅமைப்பாளர் பொன்ஜாண்சன், பேரூராட்சி கவுன்சிலர் தங்ககுமார், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் பரமராஜா உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com