என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே ஆசிரியையிடம் நகை பறித்த கொள்ளையர்களை தேடும் பணி தீவிரம்
    X

    களியக்காவிளை அருகே ஆசிரியையிடம் நகை பறித்த கொள்ளையர்களை தேடும் பணி தீவிரம்

    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்
    • களியக்காவிளை பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதி

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள நெடுங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய பிரகாஷ். இவருடைய மனைவி உஷாமேரி.

    இவர் பனங்காலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.தினமும் மாலை பள்ளி முடிந்த பிறகு களியக்கா விளை பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம்.

    நேற்று மாலை உஷாமேரி பஸ்சில் களியக்காவிளை பஸ் நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வந்தனர்.

    அவர்கள் உஷாமேரியின் அருகில் வந்து முகவரி கேட்பது போல் ஒரு பேப்பரை காட்டி உள்ளனர். அதனை வாங்கி பார்த்த போது மர்ம நபர்களில் ஒருவன் உஷாமேரியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உஷாமேரி திருடன்....திருடன்... என கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் நகையுடன் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் நிலைய த்தில் உஷாமேரி புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த களியக்காவிளை போலீசார் ஆசிரியையிடம் நகை பறித்த மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். களியக்காவிளை பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்க ளால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×