search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விதி குறித்து சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பரிசு - போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
    X

    சாலை விதி குறித்து சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பரிசு - போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

    • பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையே சாலை விதி, காவல் உதவி செயலி உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு ஓவிய போட்டி
    • ஓவியங்களில் சிறந்த ஓவியங்களை கண்டறிய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட காவல் துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையே சாலை விதி, காவல் உதவி செயலி உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் பங்கேற்று ஓவியங்கள் வரைந்ததுடன் அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனப்பி வைத்தனர். அந்த வகையில் 3 ஆயிரம் ஓவியங்கள் அனுப்பி வைக் கப்பட்டன.

    இந்த ஓவியங்களில் சிறந்த ஓவியங்களை கண்டறிய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டது. இந்த கமிட்டி தேர்வு செய்த சிறப்பான ஓவியங்களை வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    Next Story
    ×