search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் விதிமுறையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
    X

    குமரி மாவட்டத்தில் விதிமுறையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

    • கண்காணிக்க 18 குழுக்கள் அமைப்பு
    • பட்டாசு கடை தவிர தற்காலிக கொட்டகை, விரி வாக்கப்பட்ட கொட்டகைகள் எதற்கும் அனுமதியில்லை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    குமரி மாவட்டத்தில் பட்டாசு சில்லறை மற்றும் மொத்த விற்பனை உரிமம் பெற்ற இடங்கள், பட்டாசு தயாரிக்க உரிமம் பெற்ற இடங்களை ஆய்வு செய்வது மற்றும் உரிமம் பெறாத இடங்களில் பட்டாசு விற்பனை செய்வதை தடுப்ப தற்கும் 18 குறுவட்டங்களுக்கு தாசில்தார்கள், காவல்துறை அலுவலர்கள், தீயணைப் புத்துறை அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட குறுவட்ட ஆய்வாளர்களை கொண்ட 18 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    குழுவில் அடங்கியுள்ள அலுவலர்கள் அவர்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள பகுதி களில் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்போது குழு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நட வடிக்கைகள், கையாளப்படு கின்ற நடவடிக்கைகள் குறித்து தொழிற்சாலை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகியோர்களால் பயிற்சி வழங்கப்பட்டது.

    ஆய்வின் போது பட்டாசு உரிமம் பெற்ற இடத்தில் அல்லாது வேறு இடங்களில் விற்பனை செய்வதோ அனுமதி பெற்ற இடத்தை விட அதிகமான இடங்களில் செட் அமைத்து விற்பனை செய்வதோ கண்டறி யப்பட்டால் உடனடியாக அத்தகைய விதிமீறல் நடவடிக்கையில் உள்ள பட்டாசுகளை தீயணைப்பு அலுவலர் வழிகாட்டு தலின்படி பறிமுதல் செய்து பாதுகாப்பாக செயலிழக்க செய்வதோடு அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அரசு வகுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற பட்டாசு விற்பனைகள் செய்யப்படு கிறதா என்பதை உறுதி செய்திட கண்காணிப்பு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பட்டாசு விற்பனை உரிமையாளர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகள் வருமாறு:-

    பட்டாசு கடை தவிர தற்காலிக கொட்டகை, விரி வாக்கப்பட்ட கொட்டகைகள் எதற்கும் அனுமதியில்லை. உரிமம் வழங்கப்பட்ட இடத்தை வேறு எந்த நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடக் கூடாது. அவசர காலங்களில் வெளியேறும் வாசல் வெளிப் புறமாக திறக்கக்கூடியதாகவும், காற்றோட்டமாக உள்ளதாக இருக்கப்பட வேண்டும். அவசர வெளியேறும் பகுதி களை தொடர்ந்து தற்காலிக கொட்டகை அல்லது ஷெட்களுக்கு அனுமதி இல்லை. அவசர காலங்களில் வெளியேறுவதற்கான பாதை யில் எந்த வெடிபொருள்களும் இருப்பு வைப்பதோ தடைகளோ இல்லாமல் இருக்க வேண்டும். அலங்கார விளக்குகள், தொங்கு விளக்குகள், கடை களின் மேல் அல்லது கட்டி டங்களில் நுகர்வோர்களை கவர்வதற்காக வைக்கப்படும் நிகழ்வுகளில் தீப்பொறி பற்றி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ள தால் அவற்றினை விற்னை யாளர்கள் தவிர்த்திட வேண்டும். குளிர்சாதன பெட்டி, ஆசிட் திரவம் கொண்ட பேட்டரி, டீசல் ஜெனரேட்டர், அகர்பத்தி எண்ணெய் விளக்குகள் ஆகி யவற்றை பட்டாசு விற்பனை அல்லது தயாரிக்கும் இடங்க ளில் பயன்படுத்தக் கூடாது. சிறிய குழந்தைகள், மது அருந்திய நபரை மனரீதியாக உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட நபர்களை வெடி பொருட்களை ஏற்றுவதற்கு இறக்குவற்கு பயன்படுத்தக் கூடாது.

    வெடிபொருட்கள், பட்டாசு பொருட்களை கையாள்வதற்கு பயிற்சி பெற்ற அனுபவமுள்ள நபர்களை விற்பனை அதிகமில்லாத நேரங்களில் பாதுகாப்பாக ஏற்றவும், இறக்கவும் பயன்படுத்திட வேண்டும். பட்டாசு பொருட் களை ஏற்றுவதற்கு முன் பட்டாசுகளின் அபாயகரமான தன்மை குறித்து நன்கு தெரிந்த பயிற்சி பெற்ற நபர்கள் தானா என்பதை உறுதி செய்திட வேண்டும். மின் வயர்களோ, கேபிள்கள் ஸ்விட்களோ இடைநிறுத்தப்பட்டவாறு இருக்க கூடாது. இவை குழாய்களாக சுவர்களுக்குள் உறுதியானதாக இருக்க வேண்டும். உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக பட்டாசு பொருட்கள் இருக்க கூடாது. கடைபிடிக்கப்பட வேண்டிய விதி எண் 11-ன் படி பட்டாச பொருட்கள் இருப்பு பதி வேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ரசாயன பொருட்கள், பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் எதுவும் படாசு விற்பனை கடையில் இருப்பு வைக்கவோ விற்பனை செய்யவோ கூடாது. இது உரிமத்தின் (படிவம் எல்.இ.5) படி தடைசெய்யப்பட்டுள்ள தாகும்.

    பட்டாசுகள் அனுமதிக்கப் பட்ட உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். மின்சார மெயின் மீட்டர், சர்க்யூட் பிரேக்கர் போன்றவை பட்டாசு கடைக்கு வெளிப் பக்கம் இருக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. பாதுகாப்புக்காக எந்நேரமும் ஈரச்சாக்குகள், தண்ணீர் வாளிகள் மற்றும் மணல் வாளிகளை தேவையான எண்ணிக்கையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    பரிசுப் பெட்டிகள் தயா ரிப்பது கடையின் உள்பகுதியிலோ அருகிலுள்ள கடையிலோ கடைபகுதியிலோ எங்கும் மேற்கொள்ள கூடாது. புகைப்பிடித்தல் கூடாது. "பட்டாசு விற்பனை கடை முன்பு பட்டாசு வெடிக்க கூடாது" என்ற வாசகம் கொண்ட எச்சரிக்கை பலகை அல்லது பேனர் பொதுமக்கள் அறியும் வண்ணம் கடைகளின் முன்பு வைக்கப்பட வேண்டும். வெடிபொருட்கள் விதி 2008-ன் படி அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற தயாரிப்பாளர்க ளிடமிருந்து ஒப்புதலளிக் கப்பட்ட முத்திரையுடைய பெட்டிகளையே பட்டாசு விற்பனையாளர்கள் வாங்க வேண்டும். டிரக், கார் போன்ற வாகனங்களை பட்டாசு விற்பனை கடை அருகில் நிறுத்தம் செய்வதை தவிர்த்திட வேண்டும். மேற்படி வாகனங்களை இயக்கும்போது தீப்பொறி ஏற்பட்டு விபத்து நடைபெற வாய்ப்புள்ளதால் இவற்றை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். உதிரி பட்டாசுகளை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். கடைகளை மூடும்போது அனைத்து மின் இணைப்புக ளையும் துண்டித்த பின்னரே கடையை மூட வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், பெயிண்ட், எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளிலோ அல்லது கடைகளின் அருகிலோ சேமித்தல் கூடாது. பட்டாசு, அதிர்வேட்டு போன்ற வெடிபொருட்களை உரிமம் பெறாத இடத்தில் தயார் செய்யக்கூடாது. அவ்வாறு தயார் செய்வது கண்ட றியப்பட்டால் வெடி பொருள் சட்ட விதிகளின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எக்காரணம் கொண்டும் ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் பட்டாசு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. சீன பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது. அவசர கால எண் 112-ஐ பொதுமக்கள் அவசர தேவைக்கு பயன் படுத்தலாம்.

    பாதுகாப்பாக இருந்து மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்க செய்து அரசின் வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடித்து விபத்தில்லா மாசில்லா பண்டி கையை பொதுமக்களுக்கும், உரிமம் பெற்ற பட்டாசு விற்பனையாளர்களுக்கும் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×