search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல ஆலய திருவிழா
    X

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல ஆலய திருவிழா

    • திருவிழா கொடியேற்றத்துடன் தொட ங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆடம்பர கூட்டுத்திருப்பலி, 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலம் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி விழாவின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் தோமஸ் பெவ்வத்துபறம்பில் திருவிழா கொடியை ஏற்றி திருப்பலி நிறைவேற்றினார்.

    பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய பங்குதந்தை சாம் மாத்யூ மறையுரையாற்றினார். புனித அல்போன்சா சிறப்பு நவநாள் தக்கலை மறை மாவட்ட ஆவண காப்பாளர் ஜோஷி குளத்திங்கல் ஜெபித்தார். புன்னையடி புனித லூர்து அன்னை ஆலய பங்குதந்தை சதீஷ்குமார் ஜாய், மேலபெருவிளை புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குதந்தை குரூஸ்கார்மல், தக்கலை மறை மாவட்ட பொருளாளர் ஜோண்சிலாஸ், தக்கலை புலரி அச்சக மேலாளர் வினு ஜோசப் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    விழாவின் 28-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கோ ட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்தி ருப்பலி நிறைவேற்றுகிறார். 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு படந்தாலுமூடு திருஇருதய மறைவட்ட ஆலய பங்குதந்தை தோமஸ்நேசன் ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட சீனாய் தியான குழு அருட்தந்தை அனில்ராஜ் தலைமையில் நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி நடக்கி றது.

    விழாவில் 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு இடுக்கி மறைமாவட்ட ஆயர் ஜாண் நெல்லிக்குந்நேல் ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் 12.30-க்கு தேர்பவனி, 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்து, மாலை 4.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி, 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை புனித அல்போன்சா திருத்தல பங்குதந்தை சனில் ஜாண் பந்திச்சிறக்கல், துணை பங்குதந்தை ஜார்ஜ் கண்டத்தில், விழாக்குழு தலைவர் அகஸ்டின் தறப்பேல், கைக்காரர்களான ராஜையன், ஜோபெலிக்ஸ் மலையில் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×