search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி
    X

    நாகர்கோவிலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

    • கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.
    • 12 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்திற்கு கடன் தொகை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கைத்த றித்துறை மற்றும் நெசவாளர் சேவை மையம் சார்பில் 9-வது தேசிய கைத்தறி தின விழா நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

    தேசிய கைத்தறி தின விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சியும் நடத்தப்பட்டது. அகஸ்தீஸ்வரம் கைத்தறி குழுமம் மூலம் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜவுளி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

    கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

    பின்னர் நெசவாளர் நலவாழ்வு திட்டங்களான முத்ரா திட்டத்தின் கீழ் 12 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்திற்கு கடன் தொகையும், 10 நெசவாளர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான அனுமதி ஆணைகளும் வழங்கப்பட்டது. 10 திறன்மிகு நெசவாளர்களும், 5 மூத்த நெசவாளர்களும் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    மேலும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் 36 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் ஹிராலால் மற்றும் கைத்தறி துறை உதவி இயக்குனர் வரதராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×