என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவிதாலயா நாட்டிய பள்ளியில் சலங்கை அணி விழா
    X

    கவிதாலயா நாட்டிய பள்ளியில் சலங்கை அணி விழா

    • விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு
    • கலைமணிகள் கவிதா மற்றும் நிஷா கண்காணிப்பில் கவிதாலயா விழா குழுவினர் செய்திருந்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சைமன் நகரை தலைமையிடமாக கொண்டு, அஞ்சுகிராமத்தில் கிளை நிறுவனம் அமைத்து செயல்பட்டு வருகிறது கவிதாலயா நாட்டியபள்ளி. இந்த நாட்டிய பள்ளி குமரி மாவட்டத்தின் சிறந்த நாட்டிய பள்ளிக்கான விருதினை பெற்றுள்ள நிறுவனம் என்பது குறிப்பி டத்தக்கது. இப்பள்ளியின் சலங்கை அணி விழா கோட்டார் இடலாக்குடியில் அமைந் துள்ள எம்.டி.பி. கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் 13 மாணவிகள் சலங்கை அணி செய்தனர். நிகழ்ச்சியில், கலைமாமணி விஜய்வசந்த் எம்.பி., புதுச்சேரி சங்கீதா சலங்கை நாட்டியாலயா இயக்குநர் கலைமாமணி ராஜ மாணிக்கம், புதுச்சேரி கலை ஆலயம் பைன் ஆர்ட்ஸ் இயக்குநர் மற்றும் நாட்டிய ஆராய்ச்சி மேற்பார்வை யாளர் கலை மாமணி மரிய ஸ்டெல்லா, சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சிவகுமார் சிவாஜி, பாரத கலைமாமணி சூசடிமா சூசன் (கத்தார்), அழகிய பாண்டிபுரம் அனுகிரஹா சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சதீஷ் குமார், மெற்றில்டா சதீஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் திருச்சி கலை காவேரி கலைக் கல்லூரி இயக்குநர் மற்றும் செயலாளர் அருட் தந்தை லூயிஸ் பிரிட்டோ கலந்து கொண்டு சலங்கை பூஜை செய்யும் குழந்தைகளை ஆசிர்வதித்தார். கவிதாலயா நாட்டிய பள்ளி யில் பரதம், வாய் பாட்டு, மேற்கத்திய நட னங்கள் முறையே பயிற்று விக்கப்படு கின்றது. ஆண்டு தோறும் தேர்வுகள் நடத்தப் படுகிறது. குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி (யு.கே), அமெரிக்கா முத்தமிழ் யூனிவர்சிட்டி (யு.எஸ்.ஏ.) ஆகிய பல்கலைக்கழகத்தின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    பட்டயபடிப்பு முடிக்கும் தருவாயில் உள்ளவர்க ளுக்கு ஆசிரியர் பயிற்சியும் அளித்து அதற்கான தகுந்த தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப் படுகிறது. மாணவிகளுக்கு பரத நாட்டியத்தில் முறையே பயிற்சி அளித்து சலங்கை பூஜை அதனை தொடர்ந்து அரங்கேற்றமும் செய்து வைக்கப்படுகிறது. சலங்கை பூஜை விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டிய கலைமணிகள் கவிதா மற்றும் நிஷா கண்காணிப் பில் கவிதாலயா விழா குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×