என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலில் மூழ்கி பலியான குளச்சல் மீனவர்கள் 3 பேர் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி
- மீனவர்கள் பயஸ், ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகியோர் கடலில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர்
- அரசின் முதற்கட்ட நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி வழங்கப்பட்டது.
குளச்சல் :
குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இந்த படகில் மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47) பங்குத்தாரராக இருந்தார். அதே பகுதியை சேர்ந்த மீன் பிடித்தொழிலாளி கே.ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். 28-ந்தேதி நள்ளிரவு விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாரா மல் திடீரென விசைப்படகு கடலில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். மீனவர்கள் பயஸ், ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகியோர் கடலில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர். இந்த 3 மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் முதற்கட்ட நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி வழங்கப்பட்டது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மீனவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினார்.
இதையடுத்து நேற்று குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் சார்பில் மேற்கூறிய மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி விசைப்படகு சங்க அலுவலகத்தில் நடந்தது. கோட்டார் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் கலந்துகொண்டு நிதிக்கான காசோலைகளை வழங்கி னார்.
விசைப்படகு சங்க தலைவர் வர்க்கீஸ், செய லாளர் பிராங்கிளின், துணைத்தலைவர் ஆன்றனி, பொருளாளர் அந்திரியாஸ், துணைச்செயலாளர் ஆன்றனிதாஸ், நகரா ட்சி கவுன்சிலர்கள் ஜாண்ச ன், பனிக்குருசு மற்றும் விசைப்படகு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்