என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் பலசரக்கு கடையை உடைத்து ரூ.13 ஆயிரம் கொள்ளை
- எல்.இ.டி. டிவியையும் மர்ம நபர்கள் எடுத்து சென்றனர்
- கடையில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கொள்ளை
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் அனந்தம் பாலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் வயது 49 இவர் நேசமணி நகர் சைமன்காலனி பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் சுரேஷ் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
இன்று காலை கடைக்கு வந்தபோது கடையில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த மேஜை உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ 13 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டு இருந்தது.
மேலும் எல்.இ.டி. டிவியையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தனர். இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்