search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணவாளக்குறிச்சியில் குழந்தையுடன் மாயமான பெண் வேளாங்கண்ணியில் மீட்பு
    X

    மணவாளக்குறிச்சியில் குழந்தையுடன் மாயமான பெண் வேளாங்கண்ணியில் மீட்பு

    • கணவனுடன் செல்ல மறுத்து தாயுடன் சென்றதால் பரபரப்பு
    • மன வருத்தத்தில் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றதாக தெரிவித்தார்

    மணவாளக்குறிச்சி :

    மணவாளக்குறிச்சி அருகே பிள்ளை யார்கோவில் பகுதியை சேர்ந்தவர் நேவிஸ் ஜெயராஜ் இவரது மனைவி எலிசபெத் ராணி( வயது27).இத்தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    எலிசபெத் ராணி செல்போனில் நீண்டநேரம் பேசுவாராம். இதை கணவர் கண்டித்தார். இந்த நியைில் கடந்த வாரம் எலிசபெத் ராணி பள்ளிக்கு சென்று குழந்தையை அழைத்து வருவதாக மாமியாரிடம் கூறிவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து நேவிஸ் ஜெயராஜ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான எலிசசெத் ராணியை தேடி வந்தனர்.அவரது செல்போன் சிக்னல் மூலம் தேடியதில் எலிசபெத் ராணி வேளாங்கண்ணியில் இருந்தது தெரிந்தது.உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.தகவலறிந்த கணவர் நேவிஸ் ஜெயராஜ் மற்றும் எலிசபெத் ராணியின் தாயும் போலீஸ் நிலையம் வந்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில் கணவர் தன்னை திட்டியதால் மன வருத்தத்தில் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றதாக தெரிவித்தார்.பின்னர் அவர் கணவருடன் செல்ல விருப்பமில்லாமல் தாயுடன் செல்வதாக கூறினார்.இதையடுத்து போலீசார் அவரை தாயுடன் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×