search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே ரூ.3 கோடி மதிப்பில் பூங்கா மறு சீரமைப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
    X

    மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே ரூ.3 கோடி மதிப்பில் பூங்கா மறு சீரமைப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

    • பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன
    • பூங்கா மறுசீரமைப்பு பணிக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டு உள்ளது.

    நாகர்கோவில் :

    திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் தொட்டி பாலம், மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.

    இங்குள்ள ஆற்றின் கரையோரத்தில் பூங்கா உள்ளது. சிதிலமடைந்து கிடக்கும் இந்த பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. பூங்கா எவ்வாறு அமைய வேண்டுமென பொது மக்களின் கருத்து கேட்கும் வகையில் கட்டிட கலை குறித்து போட்டிகள் நடத்தப்பட்டது.

    மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் கருத்துருவாக்கம் மற்றும் திட்ட மதிப்பீடு செய்யப் பட்டு, அரசின் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து பூங்காவினை மறு சீரமைப்பது குறித்து அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்ட னர்.

    தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் சீரமைத்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரசு மேம்படுத்தி வருகிறது.

    அதன்படி மாத்தூர் தொட்டிப்பாலம் பூங்கா வினை சீரமைப்பது குறித்து மக்களிடம் கருத்து பெறப் பட்டு, திட்டமதிப்பீடும் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    பூங்கா மறுசீரமைப்பு பணிக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டு உள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள பூங்காவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணி களை கவரும் வகையில் வண்ண மயமான அருமை யான அருங்காட்சியகம், கண்கள் குளிர மலர் கண்காட்சிகள், செடி வகைகள் அமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது மாவட்ட சுற்றுலா அலுவலர் சந்தீப் குமார், பேரூராட்சி தலைவர்கள் பெனிலா ரமேஷ் (திருவட்டார்), மவுண்ட் மேரி மனோஜ் (வேர்கிளம்பி), திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதா, அரசு வக்கீல் ஜாண்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×