search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடைப்பு சரி செய்யப்பட்டதையடுத்து தோவாளை சானலில் மீண்டும் தண்ணீர் திறப்பு
    X

    உடைப்பு சரி செய்யப்பட்டதையடுத்து தோவாளை சானலில் மீண்டும் தண்ணீர் திறப்பு

    • 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது
    • கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தல்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் கன்னிபூ, கும்பப்பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது கன்னி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை தண்ணீரை நம்பியே விவசாயிகள் சாகு படி செய்துள்ளனர். சுமார் 6000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. கடைமடை பகுதியில் உள்ள நெற்பயிர்க ளுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோவாளை சானலில் துவச்சி உலக் கருவி பகுதியில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டது. 26 மீட்டர் நீளத்தில், 8 மீட்டர் ஆழத்தில் உடைப்பு ஏற்பட்டதால் சானலில் உள்ள தண்ணீர் அந்த பகுதிகளில் புகுந்தது. இதையடுத்து தோவாளை சானலில் விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு அந்த உடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். இரவு பகலாக உடைப்பு சரி செய்யும் பணி நடந்தது. இந்தநிலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்ட தற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். மேலும் பணியை வேகமாக முடித்து தண்ணீரை திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

    இதையடுத்து பணி மேலும் துரிதப்படுத்தப்பட்டு வேகமாக நடந்தது. நேற்று மாலையுடன் பணிகள் முடி வடைந்ததை தொடர்ந்து இன்று காலை தோவாளை சானலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சானலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ந்தது. கடந்த ஒரு வாரமாக தண்ணீர் இன்றி இருந்த நெற்பயிர்கள் மீண்டும் தண்ணீர் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×