search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்தறை தனியார் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
    X

    செந்தறை தனியார் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

    • விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு அவரது சொந்த நிதியில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
    • பள்ளி தாளாளர் டயானா தலைமையில் நடைபெற்றது

    மார்த்தாண்டம், அக்.18-

    குமரி மாவட்டம் செந்தறை தனியார் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ.மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா .பள்ளி தாளாளர் டயானா தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜோபி முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு அவரது சொந்த நிதியில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

    கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜகிளன், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் பேரூராட்சி உறுப்பினர் அனிதா ராஜகிளன், முன்னாள் மேல்புறம் வட்டாரத் தலைவர் சதீஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×