search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே கர்ப்பிணி பெண் தற்கொலை
    X

    இரணியல் அருகே கர்ப்பிணி பெண் தற்கொலை

    • குடிப்பழக்கத்தை கணவர் கைவிட மறுத்ததால் விபிரீத முடிவு
    • கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள பரசேரி பகத்சிங் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுபா லட்சுமி (25). இந்த தம்பதி யினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    தற்போது சுபாலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதற்காக மருத்து வரிடம் சிகிச்சையும் ஆலோ சனையும் பெற்று வந்தார். அய்யப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாகவும், இதனால் வேலைக்கு செல்லாமலும் குடும்பத்தை கவனிக்காம லும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ஓணம் விழாவையொட்டி வெளியே சென்ற அய்யப் பன், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரை மனைவி சுபாலட்சுமி பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அய்யப்பன் போனை எடுத்துப் பேசாமல் இருந்துள்ளார்.

    இதனால் மன வருத்த மடைந்த சுபாலட்சுமி வீட்டில் நேற்று இரவு தூக்கு மாட்டிய நிலையில் கிடந்துள்ளார். அவரது குழந்தை அழுகுரல் கேட்டு உள்ளே சென்று பார்த்த உறவினர்கள், சுபாலெட்சுமி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.

    உடனடியாக அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சுபாலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் குடி பழக்கத்தால் சுபாலட்சுமி தற்கொலை செய்து கொண்டு இருப்பது போலீ சாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×