என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழித்துறையில் நாளை மின்தடை
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
- மின்பாதைகளில் மின்கம்பங்களுக்கும் மின் பாதைகளுக்கும் இடை யூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி
கன்னியாகுமரி :
குழித்துறை துணை மின் நிலைய அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குழித்துறை துணை மின் நிலைய பகுதியில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலுவிளை, மேல்புறம், மருதங் கோடு, கோட்ட விளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக் கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித் துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச்சார்ந்த துணை கிராமங்களுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இந்த நேரத்தில் மின்பாதைகளில் மின்கம்பங்களுக்கும் மின் பாதைகளுக்கும் இடை யூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணியும் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.