search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டத்தில் நாளை மின்தடை
    X

    மார்த்தாண்டத்தில் நாளை மின்தடை

    • மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் நாளை (15-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    களியக்காவிளை :

    மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் நாளை (15-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணா மலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×