search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரி, ஆசாரிபள்ளம் பகுதிகளில்  நாளை மறுநாள் மின் தடை
    X

    வடசேரி, ஆசாரிபள்ளம் பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை

    • நாகர்கோவில் உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (20-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரங் களை அகற்றுவதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின் வினியோக செயற் பொறி யாளர் ஜவகர் முத்து வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (20-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத னால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான வல்லன் குமாரன்விளை, தடிக்கா ரன்கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம் உபமின் நிலையங்களிலும் மற்றும் நாகர்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன் கோவில், எம்.எஸ்.ரோடு,

    காலேஜ் ரோடு, கோர்ட் ரோடு, கே.பி.ரோடு, பால் பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், ேதாப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சக்குளம், ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், பழவிளை, தாராவிளை, எறும்புக்காடு, ஆலங்கோட்டை, சூரப்பள் ளம், பேயோடு உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    மேலும் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரங் களை அகற்றுவதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×