search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை கோட்ட பகுதிகளில் 3 நாட்கள் மின் தடை
    X

    குழித்துறை கோட்ட பகுதிகளில் 3 நாட்கள் மின் தடை

    • காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்கள் மின்விநியேகம் இருக்காது.
    • குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

    களியக்காவிளை :

    குழித்துறை மின் வினியோக செயற்பொறி யாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    குழித்துறை கோட்டம் புதுக்கடை உபகோட்டம், புதுக்கடை, கருங்கல், கொல்ல ங்கோடு, நம்பாளி, இரவி புதூர்கடை, கிள்ளியூர், பள்ளியாடி மற்றும் சூரிய கோடு ஆகிய பிரிவு களுக்குட்பட்ட பகுதிகளில் தட்டுமர கிளைகள் அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் தளவாடங்கள் மாற்றும் பணிகள் வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் மின்விநியேகம் இருக்காது.

    நாளை (28-ந்தேதி ) கொடுவனம்தோட்டம், விளாத்திகுளம், முள்ள ஞ்சேரி, குமட்டிவிளை, நெடு விளை, மெதுகும்மல், குளப்புறம். நாளை மறுநாள் (29-ந்தேதி) கல்பவிளை, மேலவிளை, சரல்கோட்டை, ஓலவிளை, காட்டுவிளை, கலிங்கராஐபுரம், சமத்துவ புரம், செறுகோல், கிள்ளியூர், இலவுவிளை, கல்லுக்கூட்டம், முருங்கவிளை.

    30-ந்தேதி காஞ்சிநகர், பேப்பிலாவிளை, சேரி, ஆலப்பாடு, மானான்விளை, கருக்கு பனை, வடக்குமாங்கரை, கொல்லன் விளை, இளம்பாலமுக்கு, வள்ளவிளை, கம்பிளார், தாமரைகுளம், ஆப்பிகோடு, இடவார், வளனூர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×