search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
    X

    நாகர்கோவிலில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

    • குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் உரிமைத்தொகை மறுக்காதே என்பன உள்பட பல்வேறு கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன
    • கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனு கொடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

    நாகர்கோவில் :

    மாற்றுத்திறனாளி குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மாநிலம் முழுவதும் இன்று கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனு கொடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் குமரி மாவட்ட குழு சார்பில், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.

    மாற்றுத்திறனாளியை பராமரிக்கும் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் உரிமைத்தொகை மறுக்காதே என்பன உள்பட பல்வேறு கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.

    Next Story
    ×