என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர் போலீஸ் குடியிருப்பு பூங்காவில் திரியும் நாய்கள்-மாடுகளால் பொதுமக்கள் அவதி
- பிடித்து அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
- ஓய்வு நேரங்களில் பூங்காவில் அமர்ந்து பொழுதை கழிப்பது வழக்கம்
நாகர்கோவில் :
நாகர்கோவில் கணேசபுரத்தில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. பூங்காவுடன் கூடிய இந்த குடியிருப்பில் கோட்டார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 45 போலீசார் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களது குடும்பத்தினர் ஓய்வு நேரங்களில் பூங்காவில் அமர்ந்து பொழுதை கழிப்பது வழக்கம். குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் இங்கு விளையாடுவது உண்டு.
இந்த சூழலில் சமீப காலங்களில் பூங்காவில் சிறுவர்-சிறுமிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகளும், நாய்களும் திரிந்து வருகின்றன. வழியை மறித்து படுத்திருக்கும் மாடுகள், எழுந்திருக்க மறுப்பதால், பூங்காவுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடி விளையாடும் சிறுவர்-சிறுமிகளை நாய்கள் விரட்டுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையை மாற்ற மாநகராட்சி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்