search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர் போலீஸ் குடியிருப்பு பூங்காவில் திரியும் நாய்கள்-மாடுகளால் பொதுமக்கள் அவதி
    X

    நாகர் போலீஸ் குடியிருப்பு பூங்காவில் திரியும் நாய்கள்-மாடுகளால் பொதுமக்கள் அவதி

    • பிடித்து அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
    • ஓய்வு நேரங்களில் பூங்காவில் அமர்ந்து பொழுதை கழிப்பது வழக்கம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கணேசபுரத்தில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. பூங்காவுடன் கூடிய இந்த குடியிருப்பில் கோட்டார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 45 போலீசார் குடியிருந்து வருகின்றனர்.

    இவர்களது குடும்பத்தினர் ஓய்வு நேரங்களில் பூங்காவில் அமர்ந்து பொழுதை கழிப்பது வழக்கம். குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் இங்கு விளையாடுவது உண்டு.

    இந்த சூழலில் சமீப காலங்களில் பூங்காவில் சிறுவர்-சிறுமிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகளும், நாய்களும் திரிந்து வருகின்றன. வழியை மறித்து படுத்திருக்கும் மாடுகள், எழுந்திருக்க மறுப்பதால், பூங்காவுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடி விளையாடும் சிறுவர்-சிறுமிகளை நாய்கள் விரட்டுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையை மாற்ற மாநகராட்சி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×