search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகர பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
    X

    நாகர்கோவில் மாநகர பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

    • பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன
    • தினமும் ஏராளமானோர் நாய் கடிக்கு ஊசி போட்டு செல்கிறார்கள்

    நாகர்கோவில் :

    வடசேரி பஸ் நிலை யம், அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, பறக்கை, கோட்டாறு, ஆசாரிபள்ளம் உள்ளிட்ட மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை இறைச்சி கடைகளில் இருந்து கொட்டப்படும் இறைச்சி கழிவுகள், சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைக ளில் சிதறி கிடக்கும் உணவு பொருட்கள் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்து குப்பைகளில் கொட்டப்படும் மீதமுள்ள உணவுகளை தின்று வளர் கின்றன.

    தற்போது தெரு நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் உணவு கிடைக்காத வேளைகளில் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை தூரத்தி செல்கிறது. அப்போது சிலர் சாலைகளில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். சிலரை தெரு நாய்கள் கடித்தும் உள்ளது. இது ஒரு புறம் இருக்க, சாலைகளின் குறுக்கே திடீரென நாய் புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது. மேலும் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் முடிகள் உதிர்ந்த நிலையில் நோய் வாய்பட்டும், காயங் களுடனும் காணப்படுகிறது. இவ்வாறு நோய்கள் பாதித்த நாய்கள் பொதுமக்கள் அருகில் வரும்போது அவர்கள் கூடுதல் அச்சம் அடைகின்றனர்.

    மேலும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, மாநகராட்சி நகர் நல மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் என தினமும் ஏராளமானோர் நாய் கடிக்கு ஊசி போட்டு செல்கிறார்கள்.

    தெரு நாய்களின் தொல்லை அதிகம் உள்ள பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல அச்சம் அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அந்த சாலையை விட்டு விட்டு தெரு நாய்கள் தொல்லை இல்லாத சாலை வழியாக சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மாநகராட்சி கூட்டத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியு றுத்தப்பட்டுள்ளது.

    அதனை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வ லர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×