search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சபரிமலை சீசன் தொடங்குவதையொட்டி கன்னியாகுமரியில் மேலும் ஒரு சுற்றுலா படகு சீரமைக்கும் பணி தொடக்கம்
    X

    சபரிமலை சீசன் தொடங்குவதையொட்டி கன்னியாகுமரியில் மேலும் ஒரு சுற்றுலா படகு சீரமைக்கும் பணி தொடக்கம்

    • சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது
    • விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவே கானந்தர் நினைவு மண்ட பமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறை யில் 133 அடி உயர திரு வள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயி ரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வரு கிறார்கள்.

    இந்தநிலையில் திரு வள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 4 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்கு வரத்து இயக்கப்பட்ட வில்லை. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவே கானந்தா ஆகிய 3 படகு களில் குகன் படகு பழுத டைந்த நிலையில் இருந்த தால் கடந்த மாதம் அதனை சின்ன முட்டம் துறை முகத்துக்கு கொண்டு சென்று கரையேற்றி சீர மைப்பு பணி நடத்தப்பட்டது. பின்னர் அந்த படகும் சீரமைப்பு பணி முடிந்து கடந்த மாதமே கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கிடையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்கு கிறது. இதைத்தொடர்ந்து விவேகானந்தா என்ற மற்றொரு சுற்றுலா பட கையும் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக்க ழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து விவேகானந்தா என்ற சுற்றுலா படகு கன்னியா குமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடல்வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு இன்று காலை கொண்டு செல்லப் பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீர மைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இந்த படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் ஒருவாரகாலம் ஆகலாம் என்று தெரிகிறது. இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு படகு புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்படும். அதன்பிறகு சபரிமலை சீசனையொட்டி அடுத்த வாரம் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

    Next Story
    ×