search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாசிக்கொடை விழாவையொட்டி மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நாளை நடக்கிறது
    X

    மாசிக்கொடை விழாவையொட்டி மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நாளை நடக்கிறது

    • ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 8 மணி வரை லலிதா சகஸ்ரநாமம்
    • 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டி வீதி உலா வருதலும் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழி படுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் மாசிக் கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த வருடத்தின் மாசிக்கொடை விழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.நேற்று 7-ம் நாள் விழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது.

    ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 8 மணி வரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், 8 மணி முதல் மாலை 4 மணிவரை சொற்பொழிவு போட்டி, 4 மணிமுதல் 5 மணிவரை சங்க வருடாந்திர மகாசபை கூட்டம், 5 மணிமுதல் இரவு 7 மணிவரை கலைநிகழ்ச்சி, 7 மணிமுதல் 9 மணிவரை நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ் தலைமையில் மாதர் மாநாடு, இரவு 9 மணிமுதல் 10.30 மணிவரை சிறப்பு சொற்பொழிவு, 10.30 மணிக்கு மேல் புராண நாட்டிய நாடகம் ஆகியவை நடந்தது.

    விழாவின் 8-ம் திருநா ளான இன்று காலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி நடந்தது. மதியம் 12 மணிக்கு நடுவூர்க்கரை சிவசக்தி திருக்கோவிலில் இருந்து மாவிளக்கு பவனி யும் மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும் நடந்தது.

    மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதலும், 6.15 மணிக்கு சந்தனக்குட ஊர்வலமும், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு பக்திஇன்னிசையும் சொற்பொழிவும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. 9-ம் திருவிழாவான நாளை (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதலும், 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டி வீதி உலா வருதலும் நடக்கிறது.

    Next Story
    ×