search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே மருத்துவமனை சென்ற நர்சு மாயம்
    X

    தக்கலை அருகே மருத்துவமனை சென்ற நர்சு மாயம்

    • அபிலாஷினி மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
    • மாயமான அபிலாஷினி கடத்தப்பட்டாரா? இல்லை வேறுஏதாவது காரணமாக வீட்டை விட்டு சென்றாரா? என விசாரணை

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு சாங்கை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் அபிலாஷினி (வயது 21).

    இவர் தக்கலை அருகே பள்ளியாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை அபிலாஷினி மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    வழக்கமாக மாலையில் வீடு திரும்பும் அவர், இரவு வரை வராததால் ராதாகிருஷ்ணன் மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

    அபிலாஷினி எங்கு சென்றார் என்பது தெரியாததால், உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ராதா கிருஷ்ணன் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிலாஷினி கடத்தப்பட்டாரா? இல்லை வேறுஏதாவது காரணமாக வீட்டை விட்டு சென்றாரா? என விசாரணை நடத்தி வருகின்றார். இது போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு இளம் பெண் மாயமானது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×