search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜாக்கமங்கலம் அருகே முகவரி கேட்பது போல் பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    கோப்பு படம் 

    ராஜாக்கமங்கலம் அருகே முகவரி கேட்பது போல் பெண்ணிடம் நகை பறிப்பு

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கைவரிசை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கி ளில் வந்து கம்மலை அறுத்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள மறுகால் தலைவிளையைச் சேர்ந்தவர் தங்க கிருஷ்ணன். இவ ரது மனைவி விஜய நிர்மலா(வயது40). இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    நேற்று கார்த்திகை வடலி அருகில் விஜயநிர்மலா ஆடுகளுக்கு புல்லறுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள், விஜயநிர்மலா அருகில் சென்று மோட்டார் சைக்கிள் ரிப்பேர் ஆகி விட்டது. இங்கு ஒர்க்ஷாப் எங்கு உள்ளது என்று கேட்டு உள்ளனர். அவர்களுக்கு விஜய் நிர்மலா பதில் அளித்துக் கொண்டிருந்தார்.அப்போது அவர் சற்றும் எதிர்பாராத நிலை யில் மோட்டார் சைக்கி ளில் வந்த 2 பேரும் விஜய நிர்மலா காதில் அணிந்தி ருந்த கம்மலை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்ற னர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்ச லிட்டார்.

    இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக ராஜாக்க மங்கலம் போலீஸ் நிலை யத்தில் விஜய நிர்மலா புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கி ளில் வந்து கம்மலை அறுத்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×