search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் காளான் வளர்க்கும் பயிற்சி
    X

    குமரி மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் காளான் வளர்க்கும் பயிற்சி

    • குமரி மாவட்ட உழவர் பயிற்சி மையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி 6 நாட்கள் நடைபெற்றது.
    • இலவச மதிய உணவு மற்றும் தேநீர் மற்றும் ஊக்கத்தொகை ரூ.50 வழங்கப்பட்டது.

    ராஜாக்கமங்கலம் :

    கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை நலத்துறை சார்பில் ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நோக்கத்தில் குமரி மாவட்ட உழவர் பயிற்சி மையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி 6 நாட்கள் நடைபெற்றது.

    இப்பயிற்சியினை ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வேளாண் துறை இணை இயக்குனர் வாணி முன்னிலை வகித்தார். வேளாண் துறை துணை இயக்குனர் ஆல்பட் ராபின்சன் 6 நாள் நடைபெற்ற முகாமிற்கு தலைமை ஏற்று நடத்தினார். முகாமில் துணை இயக்குனர் கீதா மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.பயிற்சியில் ராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், தக்கலை, திருவட்டார், மேல்புறம், முஞ்சிறை ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 28 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலையம் வேளாண் துறை விற்பனை நிலையம் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல், தொழில்முனைவோர் ஆக்குதல் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவச மதிய உணவு மற்றும் தேநீர் மற்றும் ஊக்கத்தொகை ரூ.50 வழங்கப்பட்டது. பயிற்சி முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் துறை அலுவலர் சுபாஷ் செய்திருந்தார்.

    Next Story
    ×