search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் பெண் வக்கீலின் மோட்டார் சைக்கிள் திருட்டு
    X

    நாகர்கோவிலில் பெண் வக்கீலின் மோட்டார் சைக்கிள் திருட்டு

    • சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளையன் உருவம் சிக்கியது
    • வேப்பமூடு வழியாக கொள்ளையன் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் செண்பகவல்லி. இவர் நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவரது அலுவலகம் நாகர்கோவில் பொதுப்பணித்துறை சாலையில் உள்ள முத்தமிழ் தெருவில் உள்ளது. தினமும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வக்கீல் செண்பகவல்லி கோர்ட்டுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று செண்பக வல்லி தனது இரு சக்கர வாகனத்தில் அலுவல கத்திற்கு சென்றார். பின்னர் வாகனத்தை அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு மற்றொரு பெண் வக்கீலின் மோட்டார் சைக்கிளில் கோர்ட்டுக்கு சென்றார். அவர் மதியம் அலுவலகத்திற்கு திரும்பி வந்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை.

    இதையடுத்து பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளையன் ஒருவன் வக்கீல் செண்பகவல்லியின் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்தமிழ் தெருவிலிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வேப்பமூடு வழியாக கொள்ளையன் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

    இதைத்தொடர்ந்து கொள்ளையன் உருவத்தை வைத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வடசேரி பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மேலும் ஒரு மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×