search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலயம் சார்பாக மருத்துவ முகாம்
    X

    ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலயம் சார்பாக மருத்துவ முகாம்

    • கலிக்கம் மருத்துவ முகாம் ஆலய வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் 17-ந் தேதி நடைபெறுகிறது.
    • காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆலய வளாகத்தில் கண்ணில் சொட்டு மருந்து விடும் கலிக்கம் மருத்துவ முகாம்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி பொற்றையடியில் அமைந்துள்ளது ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலயம். இவ்வாலயம் சார்பாக கண்ணில் சொட்டு மருந்து விடும். கலிக்கம் மருத்துவ முகாம் ஆலய வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் 17-ந் தேதி நடைபெறுகிறது.

    இந்த மாதம் நாளை மறுநாள் (வெள்ளிகிழமை) காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆலய வளாகத்தில் கண்ணில் சொட்டு மருந்து விடும் கலிக்கம் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கலிக்கம் என்ற சொட்டு மருந்து கண்ணில் விடுவதால் சொரியாஸிஸ், வெண்படை, கரும்படை, விஷக்கடி, தேமல் மற்றும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை. குளுக்கோமா, ரெடினா போன்ற குறைபாடுகள் உடையோருக்கு பயனளித்து வருவதாக மருத்துவ முகாம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வரும் ஸ்ரீஷீரடி சாயியாபா ஆனந்த ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×