search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பஸ் நிலையத்தில் தற்காலிக சந்தை அமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ் திடீர் ஆய்வு
    X

    அண்ணா பஸ் நிலையத்தில் தற்காலிக சந்தை அமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ் திடீர் ஆய்வு

    • கடைகளில் ஷட்டர்களை 10 நாட்களுக்குள் அமைக்காவிட்டால் சீல் வைக்க உத்தரவு
    • வடசேரி பஸ் நிலைய விரிவாக்க பணிகள் நடைபெறுகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு சில கடைகளில் நடைபாதையில் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதை உடனடியாக அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.

    பின்னர் கடைகளில் ஷட்டர்கள் இல்லாமல் சீட்டுகளால் மூடப்பட்டு இருந்தது. அதை உடனடியாக மாற்றிவிட்டு ஷட்டங்கள் அமைக்க உத்தரவிட்டார். 10 நாட்களுக்குள் ஷட்டர் அமைக்காத கடைகளை சீல் வைக்கவும் மேயர் மகேஷ் உத்தரவிட்டார். மேல் கூரை சேதமடைந்ததை சீரமைக்க வும் அறிவுறுத்தினார்.

    குடிநீர் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருந்தது. அந்த தொட்டியை உடனடியாக மாற்றி விட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க மேயர் மகேஷ் உத்தரவிட்டார். தாய்மார்கள் பாலூட்டும் அறையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேல் கூரை சேதமடைந்து இருந்தது.

    அந்த மேல்கூரையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் அங்கு இருக்கைகள் அமைக்கவும் அறிவுறுத்தினார். அந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை இரவு 9 மணிக்கு மேல் மூடி பராமரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் கட்டண கழிப்பறையை பார்வையிட்டார்.

    கழிவறை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியிடம் மகேஷ் குறைகளை கேட்டு அறிந்தார். மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் கழிவறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த கட்டுமான பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தையொட்டியுள்ள வடசேரி கூட்டுறவு பண்டகசாலை பல்பொருள் அங்காடியை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு பாமாயில் வழங்கவில்லை என்றும், பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டினார்கள். பின்னர் வடசேரி பஸ்நிலையம் விரிவாக்க பணிகள் நடைபெறுவதையடுத்து வடசேரி கனக மூலம் சந்தையில் செயல்படும் கடைகளை அண்ணா பஸ்நிலையத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆய்வு செய்தார். தற்காலிக கடைகளை எந்த பகுதியில் அமைக்கலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண் டார்.

    அப்போது பஸ் நிலையத்தின் சுரங்க நடைபாதையையொட்டியுள்ள காலி இடத்தில் தற்காலக கடைகளை அமைப்பது தொடர்பாக ஆலோசிக் கப்பட்டது. பஸ் நிலை யத்திற்குள் இருந்த இருசக்கர வாகனங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த மேயர் மகேஷ் அறிவுறுத்தினார்.

    காமராஜர் பில்டிங்கில் செயல்பட்டு வரும் கடைகளையும் ஆய்வு செய்தார். கட்டிடத்தின் முன் பகுதியில் வேறு நபர்கள் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று கூறினார். மேலும் அண்ணா பஸ் நிலையத்தில் கட்டண பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின்போது என்ஜினீயர் பாலசுப்ரமணியன், நகர்நல அதிகாரி ராம்குமார், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ரோஸிட்டா, இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வ குமார் மற்றும் திருமால், தி.மு.க. நிர்வாகி சரவணன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×