search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி சிலைக்கு மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை
    X

    கருணாநிதி சிலைக்கு மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை

    • தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்பு
    • இன்று 100-வது பிறந்த நாள்

    நாகர்கோவில் :

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தின் முன்புள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கருணாநிதி படத்திற்கு மலர் தூவி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திர குமார், பிராங்கிளின், லிவிங்ஸ்டன், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர், தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒடிசாவில் ெரயில் விபத்தில் பலியான ெரயில் பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மேயர் மகேஷ் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    கருணாநிதி பிறந்தநாளையொட்டி நாகர்கோவில் நகர பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் கருணாநிதி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கருணாநிதி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    Next Story
    ×