search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளியை மகிழ்வாக கொண்டாடுவோம்
    X

    தீபாவளியை மகிழ்வாக கொண்டாடுவோம்

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
    • வரும் ஆண்டு வெற்றி ஆண்டாக அமையட்டும்

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீப ஒளி திருநாள், தித்திக்கும் நன்நாள், மகிழ்ச்சி பொங்கும் பொன் நாள், சுற்றம் சூழ மகிழும் நாள், உலகமெங்கும் கொண்டாடி சிறக்கும் நாள்.

    இந்நாளில் புத்தாடை அணிந்து, தர்மங்கள் செய்து மகிழ்வுடன் உணவுண்டு, உறவுகள் நட்புகளுடன் கலந்துரையாடி உள்ளம் மகிழும் மகத்தான நாள். இந்நாளில் இறைவன் திருவடி வணங்கி இல்லாமை இல்லாமல் ஆகிடவும், சமீப காலமாக நடக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் அழிவு சக்திகளை அழிய செய்திடவும் இறைவனை வணங்குவோம்.

    இன்பங்கள் மலர்ந்து, துன்பங்கள் மறைந்து, செல்வங்கள் பெருகி

    அனைத்து வளங்களும் அனைவரும் பெற்று வாழ்ந்திட இறைவன் அருள் புரியட்டும். அ.தி.மு.க. 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சிகரமான இவ்வாண்டில் காணுகின்ற தீபாவளி திருநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு நாம் அனைவரும் மகழ்ச்சி யுடன் கொண்டாடுவோம். வரும் ஆண்டு வெற்றி ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×