search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில் ஆடம்பரக் கூட்டு திருப்பலி
    X

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில் ஆடம்பரக் கூட்டு திருப்பலி

    • முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடந்தது
    • புனித அல்போன்சா சிறப்பு நவநாளும் தொடர்ந்து திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

    நாகர்கோவில் :

    கேரளாவில் பரணங்ஙானம் என்ற இடத்தில் தூய அருட்சகோதரியாக வாழ்ந்த அல்போன்சா 1946-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி தனது 36-வது வயதில் விண்ணகம் சென்றார். அவரைத் திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி புனிதையாக பிரகடனப்படுத்தினார். அவரின் திருப்பெயரை தாங்கிய தமிழ்நாட்டில் முதல் திருத்தலமாக விளங்குவது நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலமாகும்.

    இத்திருத்தல திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 8-ம் நாள் அல்போன்சா விண்ணகம் சென்ற நாளானதால் அதனை சிறப்பிக்கும் பொருட்டுக் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இவர்களோடு இணைந்து இத்திருவிழா திருப்பலியை தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தாமஸ் பவுவத்துப்பறம்பில் அருட்தந்தை ஜாண் கென்னடி, அருட்தந்தை டைனிசியஸ், அருட்தந்தை செல்வராஜ், அருட்தந்தை அருளப்பர், அருட்தந்தை யுஜின், அருட்தந்தை மரிய சூசை வின்சென்ட், அருட்தந்தை அமலநாதன், அருட்தந்தை தார்சியுஸ், அருட்தந்தை குருசுகார்மேல், அருட்தந்தை செல்வராஜ், அருட்தந்தை டினு சி.எம்.ஐ., அருட்தந்தை மத்தேயு அறைக்கபலம் சி.எம்.ஐ. ஆகியோர் நிறைவேற்றினர். இத்திருவிழா திருப்பலியில் சாந்திதான் குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    திருவிழாவின் 10-ம் திருவிழா நாளை (30-ந்தேதி) நடைபெறுகிறது. அன்றைய தினம் இடுக்கி மறைமாவட்ட ஆயர் ஜாண் நெல்லிக்குந்நேல் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் தொடர்ந்து புனித அல்போன்சா திருத்தேர்ப்பவனியும் நேரச்சை விருந்தும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாளும் தொடர்ந்து திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல பங்குத்தந்தை பேரருட்தந்தை சனில் ஜாண் பந்திச்சிறக்கல் மற்றும் துணை பங்குத்தந்தை அருட்தந்தை ஜார்ஜ் கண்டத்தில் ஆகியோராலும் மற்றும் விழாக்குழு தலைவர் அகஸ்டின் தறப்பேல், கைக்காரர்களான முனைவர் ராஜையன் மற்றும் ஜோ பெலிக்ஸ் மலையில் ஆகியோர் திருத்தல பங்கு மக்களோடு இணைந்து செய்து வருகின்றனர்.

    Next Story
    ×