search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறக்கை அருகே மதுசூதனபுரம் தேவி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    பறக்கை அருகே மதுசூதனபுரம் தேவி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    • நண்பகல் 12 மணிக்கு அஷ்டாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.
    • மதியம் 1 மணிக்கு மகா அன்னதானம், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பறக்கையை அடுத்த மதுசூதனபுரத்தில் இந்து நாடார் சமுதாய வகை தேவி முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று (24-ந்தேதி) தொடங்கி ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 50 நாட்கள் நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 5 மணிக்கு மங்கள இசை, ஆச்சர்ய வர்ணம், கணபதி ஹோமம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து பஞ்சகவ்வியம் பூஜை, பீட பூஜை, வாஸ்து பூஜை, ஹோமம் பரிகார பூஜை நடந்தது.

    நாளை (25-ந்தேதி) காலை கணபதி ஹோமம், பீட சுத்தி, பிம்ப சுத்தி, கலச பூஜை, நவக்கிரக ஹோமம், சுதர்சன பூஜை ஆகியவை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு லட்சுமி நரசிம்ம ஹோமம், அகோர ஹோமம் நடக்கிறது.

    26-ந்தேதி காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், அதிவாச ஹோமம், கலசபூஜை, தொடர்ந்து காலை 6 மணிக்கு பறக்கை ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், காலை 9 மணிக்கு முத்தாரம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அஷ்டாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர். காந்தி மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி 51-வது வார்டு கவுன்சிலர் முத்துராமன், இந்து மகாசபா மாநில தலைவர் பால சுப்பிரமணியன், மாவட்ட பாரதிய ஜனதா தர்மலிங்க உடையார், முன்னாள் பஞ்சா யத்து தலைவர் சிதம்பரம், பறக்கை ஊராட்சி தலைவர் கோசலை சிதம்ப ரம், துணை தலை வர் கலா செல்வன், சிவராமமங்கலம் துரையப்பா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மதியம் 1 மணிக்கு மகா அன்னதானம், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி வருகிற 14-ந்தேதி வரை தினமும் சுவாமிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது.

    ஒவ்வொரு நாளும் அன்னதானம், சிறப்பு வழிபாடு மற்றும் தீபாரா தனை ஆகியவை நடக்கிறது. ஜூன் மாதம் 11- ந்தேதி சக்தி வினாயகருக்கு சிறப்பு பூஜை, உச்சகால தீபாரா தனை, நண்பகல் 12.30 மணிக்கு மகா அன்னதானம், திருவிளக்கு வழிபாடு, இரவு அன்னதானம், நடக்கிறது.

    12-ந்தேதி புனித நீர் கொண்டு வருதல், தீபாராதனை, வில்லிசை, 13-ந்தேதி அபிஷே கம், வில்லிசை, அம்ம ன்மார்கள் புனித நீராடுதல், உச்சகால் தீபாராதனை, அம்மன் மஞ்சள் நீராடுதல், அம்மன் வீதி உலா, மதியம் 1.35 மணிக்கு அன்னதானம், வில்லிசை, அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 1.30 மணிக்கு சுடலை மாட சுவாமி வீதி உலா வருதல், தீபாராதனை ஆகியவை நடக்கிறது. 14-ந்தேதி நையாண்டி மேளம், வில்லிசை, சிறப்பு தீபாராதனை, மகா அன்னதானம், தீபாராதனை, பெரிய பலவேசம், சின்ன பலவேசம் சுவாமிகள் வீதி உலா வருதல் , மங்கள தீபம் ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடு களை ஊர் தலைவர் வடிவேல், செயலாளர் அய்ய ப்பன், பொருளாளர் மணி கண்டன் மற்றும் நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், கண்ணன், செந்தி ல்வேல்,ஊர் பொது மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×