search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் மதுக்கடைகள் 3 நாட்கள் செயல்படாது- கலெக்டர் தகவல்
    X

    குமரி மாவட்டத்தில் மதுக்கடைகள் 3 நாட்கள் செயல்படாது- கலெக்டர் தகவல்

    • சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    • மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் ஆகியவை நாளை (22-ந் தேதி) முதல் 3 நாட்கள் செயல்படாது.

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    இந்த சிலைகள் விஜர்சனத்திற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் ஊர்வலம் நடை பெறும் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை நாளை (22-ந் தேதி) முதல் 3 நாட்கள் செயல்படாது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×